Thursday, May 27, 2010

பதிவுலக நண்பர்களுக்கு ஓர் அவசர அன்பான வேண்டுகோள்


கேரளா அரசு அக்கிரமத்தால் முல்லை பெரியாரில் 2, 17,000 ஏக்கர் பாசன உரிமையை இழக்கும் அபாயம், 65 லட்சம் மக்கள் குடிநீரை இழக்க நேரும் துயரம்.. மே 28 அன்று கோவை செல்லும் பாதைகளை மறித்து அறவழியில் நடத்தும் போராட்டம். வைகோ அவர்கள் கடந்த 6 மாதங்களாக 600 கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி உள்ளார்கள். இதற்கு வீட்டுக்கு ஒருவர் செல்ல வேண்டும். முடியாதவர்கள் தங்கள் சார்பில் அனுப்பி வைக்க வேண்டும். இது கட்சி சார்பான போராட்டம் அல்ல. பின் வரும் பட்டியலை பாருங்கள்.
கலந்து கொண்டு ஒவ்வொரு சாலையிலும் தலைமை ஏற்கும் குழு இவர்கள்.
வைகோ மதிமுக பொது செயலாளர் அவர்கள்
பழ.நெடுமாறன் (முல்லைப் பெரியாறு உரிமை மீட்புக் குழு),
கம்பம் கே.எம்.அப்பாஸ், (ஐந்து மாவட்ட முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம்),
சேக் தாவூத், தலைவர், தமிழ் மாநில முÞலிம் லீக் - குமுளி ரோடு லோயர் கேம்ப் (தேனி மாவட்டம்)
கொளத்தூர் மணி - தலைவர், பெரியார் திராவிடர் கழகம்,
கோவை கு.இராமகிருஷ்ணன் பொதுச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

அர்ஜூன் சம்பத் -இந்து மக்கள் கட்சி
செ.நல்லுசாமி எம்.ஏ.பி.எல்., (தமிழ்நாடு கள் இயக்கம்),
என்.எஸ்.பழனிசாமி (கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்),
ஆடிட்டர் மு.பாலசுப்பிரமணியம் (விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் பொருளாளர்)
தியாகு- தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
பெ. மணியரசன் -தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
உ.தனியரசு- மாநில அமைப்பாளர், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
பி.வி.கதிரவன் -தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் அகில இந்திய பார்வர்ட் பிளாக்

இது தமிழக அரசியல் நல்ல ஆரோக்கியமான பாதைக்கு திரும்பும் ஒரு திருப்பு முனை போராட்டம். இந்த போராட்டத்தில் தேர்தல் நோக்கு இல்லை. உரிமையை மீட்டு எடுக்கும் ஒரு ஆரம்பமே. எப்படி சொல்கிறேன் என்றால் இது வரை நடை பெற்ற விழிப்புணர்வு கூட்டங்களில் திமுக அதிமுக கட்சி தொண்டர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.. வலை பதிவு நண்பர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் தங்கள் பகுதியில் உள்ள உறவினர்கள் நண்பர்கள் செல்வதற்கு ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் விபரங்களுக்கு மதிமுக இணைய தளம்

நன்றி
பாலா

1 comment: