Thursday, June 17, 2010

சீமான் நீங்கள் யார்..? உங்கள் நோக்கம் என்ன..? பாகம்1



இந்த பதிவின் நோக்கம் யாரையும் 
ங்கபடுத்துவதர்க்கு இல்லை. ஆனால் ஈழ தமிழர்களின் வாழ்க்கையில் விளையாடிய(டும்) கருணாக்களின் செயல்களால் விளையும் ஒரு சந்தேகம்.. 


நிச்சயமாக உங்களை சந்தேகப்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன.. நீங்கள் நிச்சயமாக நெருப்பாற்றில் நீந்தி உங்களை வெளிக்காட்ட வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.. 

துரோகத்தால் பெரும் இழப்புகளை சந்தித்து கொண்டிருக்கும்  ஈழ தமிழர்களின் வாழக்கையில் மீண்டும் ஒரு நம்பிக்கை துரோகம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இந்த பதிவிற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்.. அதுவரை நான்மட்டும் அல்ல ஈழ தமிழர்களுக்கும் & ஆதரவாளர்களும் உங்களை உற்று கவனித்துவரும் என்னை போன்ற நோக்கர்களுக்கும் சந்தேகம் இருக்கத்தான் செய்யும்..





சந்தேகங்கள் & கேள்விகள் :

நாம் தமிழர் இயக்கத்தின் நோக்கம் என்ன..?

தமிழக அரசியலில் கருணாநிதியை பற்றிய உங்கள் கருத்து என்ன..?

ஈழ விசயத்தில் கருணாநிதியை பற்றிய உங்கள் கருத்து என்ன..?

யாருடைய கொள்கைகளை எதிர்த்து நீங்கள் அரசியல் செய்ய போகிறீர்கள்..?

அல்லது எந்த கொள்கைக்காக நீங்கள் போராட போகிறீர்கள்..?

நாம் தமிழர் இயக்கம் என்பது சிபா.ஆதித்தனார் ஏற்படுத்திய இயக்கம். நீங்கள் ஏன் அதை தேர்ந்து 
எடுத்தீர்கள்..?

காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் அளவுக்கு திமுகவையும் எதிர்க்க கூடிய காரணங்கள் இருக்கிறது என்பதை ஏற்று கொள்கிறீர்களா..?

நெடுமாறன் பற்றிய உங்கள் கருத்து என்ன..?

வைகோவை பற்றி உங்கள் கருத்து என்ன..?

நெடுமாறன், வைகோ உடன் இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவையில் இணைந்து செயல்படுவதில் 
உங்களுக்கு இருக்கும் தயக்கம் என்ன..?

முல்லை பெரியாருக்காக நெடுமாறன், வைகோ, கம்யுனிஷ்ட்கள் மற்றும் கொள்கைகளில் முரண்பட்ட பெரியார் திக, முஸ்லிம் கட்சி, இந்து மக்கள் கட்சி போன்றவர்கள் எல்லாம் கைகோர்த்து தமிழ்நாடு என்ற உணர்வில் மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டம் நடத்திய போது, நீங்கள் ஏன் கை கோர்க்கவில்லை. 

கண்டிப்பாக இந்த போராட்டத்தில் வாக்கு அரசியல் இல்லை.. ஏன் என்றால் அதில் கலந்துகொண்ட சில அமைப்புகள் மற்றும் சில தலைவர்கள் தேர்தல்களில் பங்கு பெறுவதே இல்லை.. 

இணைய தளங்களில் நாம் தமிழர்களின் தொண்டர்கள் என்கிற பெயரில் வைகோ மற்றும் நெடுமாறனை மட்டம் தட்டுவதிலும், கலங்கப்படுத்துவதிலும் குறியாக இருப்பதின் நோக்கம் என்ன.. 

தமிழர் விவகாரியங்களில் வைகோவின் நிலைப்பாடு எந்த காலத்திலும் மாறியது இல்லை, மாறப்போவதும் இல்லை.. அதுவும் ஈழ விசயத்தில் அவர் அளவுக்கு கஷ்டப்பட்ட தலைவர் ஒருவரும் இந்தியாவில் இல்லை.. இது எதிரிக்கும் தெரியும்.. 

அப்படி இருக்கையில் உங்களது நுண்ணரசியல் வைகோவை மட்டம் தட்டுவதில் குறியாக இருப்பதன் நோக்கம் என்ன..? 

நீங்கள் கனடாவில் கைது செய்யப்பட்டதும் இந்தியாவில் வந்து இறங்கியதும் உங்கள் தொண்டர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் ஏன் ஒரு நாடகமாக இருக்ககூடாது.. 

இந்த விசயத்தில் நீங்கள் கனிமொழியை தொடர்பு கொண்டதாக வரும் செய்திகளுக்கு உங்கள் பதில் என்ன.. 

இந்திய திரைப்பட விழாவுக்கு எதிரான போராட்டங்களும் அதன் விளைவுகளும் ஏன் திட்டமிட்டவையாக இருக்ககூடாது.. ஈழ விசயத்தில் தமிழத்தில் பிளவை உண்டாக்க உங்களை முன்னிலை படுத்த ஏன் சிலர் திட்டமிட்டு இந்திய திரைப்படவிழாவை வழுவிழக்க செய்து உங்களால் கிடைத்த வெற்றி என்று கொண்டாடவேண்டும்.. 

இதனால் ஈழ ஆதரவாளர்களை உங்கள் பக்கம் திருப்பி போராட்டத்தின் வீரியத்தை செயல் இழக்க செய்யும் நோக்கத்தில் உங்களையும் நாம் தமிழர் இயக்கத்தையும் பயன்படுத்தி இருக்ககூடாது..
இந்திய திரைப்பட விழா தோல்வி அடைந்ததில் நிச்சயமாக இந்திய, தமிழக  அரசுக்கு ஒரு நஷ்டம் இல்லை.
ஆனால் ஈழ போராட்ட வாதிகளுக்கு வெற்றி, அதற்கு காரணம் நீங்கள் என்ற போர்வையில் உங்களை இனிவரும் காலங்களில் போராட்டங்களில் முன்னிறுத்தி போராட்டத்தை மட்டுப்படுத்த ஏன் இந்திய, தமிழக அரசுகள் இந்த தற்காலிக தோல்வியை வழிய ஏற்படுத்தி  இருக்ககூடாது..

இதையும் பாருங்கள் - மாமியார் உடைத்தால் மண்குடம்… சீமான் உடைத்தால்?
தொடர்ந்து எழுதுவேன்...